புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக பெங்களூருவில் பீன்யா என்ற இடத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் நிறுவனம் மீது கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே குற்றம் சாட்டினார்.
மேலும், இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக வனப்பகுதியில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக 'டாக்சிக்' படத்தின் தயாரிப்பாளர் மீது கர்நாடக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.