ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி உள்ள ‛அமரன்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று வாரங்களை நெருங்கிவிட்டபோதிலும் படத்திற்கு வரவேற்பு தொடர்ந்து இருக்கிறது. வசூலும் 250 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 'அமரன்' படத்தை திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், "'அமரன்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும். நல்ல உள்ளடக்கம் உள்ள திரைப்படம் ரசிகர்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என்பதற்கு 'அமரன்' படத்தின் மாபெரும் வெற்றியே உதாரணம்'' என தெரிவித்துள்ளார்.