ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
சூப்பர் சிங்கர் ஜுனியர், இந்தியன் ஐடல் ஜுனியர் ஆகிய டிவி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நித்யஸ்ரீ வெங்கடரமணன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடி வருகிறார். எந்த ஒரு பாடகர், பாடகிக்கும் இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அப்படி ஒரு கனவு நித்யஸ்ரீக்கு நடந்து முடிந்துள்ளது.
இளையராஜா இசையில் உருவாகி வரும் மே 30ம் தேதி வெளியாக உள்ள 'சஷ்டிபூர்த்தி' தெலுங்குப் படத்தில் பாடியுள்ளார். 'ராத்ரன்த ரச்சே' என்ற அந்தப் பாடலில் இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இளையராஜா இசையில் முதன் முதலில் பாடியது குறித்து, “ஒன் அன்ட் ஒன்லி மேஸ்ட்ரோ இளையராஜா சார் இசையில் எனது முதல் பாடல் 'சஷ்டிபூர்த்தி' படத்தில் ராத்ரன்த ரச்சே' பாடியுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாசுதேவ் அவர்களுக்கும் 'சஷ்டிபூர்த்தி' படக்குழுவினருக்கும் எனது சிறப்பு நன்றி.
காலத்தால் அழியாத சாதனையாளரின் பாடகி என எனது பெயரும் ஸ்க்ரோலிங் டைட்டிலில் செல்வதைப் பார்ப்பது எனது கனவு நனவான தருணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.