சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

தென்னிந்தியத் திரையுலகத்தின் லேடி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் விஜயசாந்தி. அந்தக் காலத்தில் முன்னணி நடிகர்களுக்கே தனது ஆக்ஷன் நடிப்பால் 'டப்' கொடுத்தவர். இடைப்பட்ட காலத்தில் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் இறங்கினார்.
14 வருட இடைவெளிக்குப் பிறகு 2020ல் மகேஷ்பாபு நாயகனாக நடித்த 'சரிலேறு நீக்கெவரு' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கடுத்து 'அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி' என்ற படத்தில் நடித்தார். அப்படம் கடந்த வாரம் வெளியாகி ஓடி வருகிறது.
படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில்,
“எங்கள் கடின உழைப்பின் பலனைக் கண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர்கள் சமரசம் செய்து கொள்ளளாமல், இந்தப் படத்தை ஒரு பெரிய வெற்றியாக மாற்றியுள்ளனர். இது ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிகள் நிறைந்த கதை.
வெளிவரும் கருத்துக்களில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் எதிர்மறையான கருத்துக்களைப் பரப்புவது பொருத்தமானதல்ல. ஒவ்வொரு புதிய படத்தையும் இடிக்க முயற்சிப்பவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்தத் துறையை வாழ விடுங்கள். ஒரு படத்தை முழு மனதுடன் ஆசீர்வதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு தயாரிப்பாளரின் முதலீட்டைக் கெடுக்காதீர்கள். இந்தப் படம் இறுதியில் வெற்றி பெறும். இந்தப் படத்தின் தயாரிப்பின் போது கல்யாண் ராமுடன் எனக்கு ஒரு நேர்மறையான பிணைப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே, அவர் என்னை 'அம்மா, அம்மா' என்று அன்பாக அழைத்தார், மேலும் மிகுந்த அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தினார்," என்று பேசினார்.
சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் எந்த ஒரு புதிய படத்தையும் 'டிரோல்' என்ற பெயரில் கண்டபடி விமர்சிப்பது ஒரு பேஷனாகிவிட்டது. அதனால் பல படங்கள் பாதிக்கப்படுகின்றன. அப்படி விமர்சிப்பவர்களைக் கண்டித்து சரியாகப் பேசியிருக்கிறார் விஜயசாந்தி.