தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
தென்னிந்தியத் திரையுலகத்தின் லேடி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் விஜயசாந்தி. அந்தக் காலத்தில் முன்னணி நடிகர்களுக்கே தனது ஆக்ஷன் நடிப்பால் 'டப்' கொடுத்தவர். இடைப்பட்ட காலத்தில் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் இறங்கினார்.
14 வருட இடைவெளிக்குப் பிறகு 2020ல் மகேஷ்பாபு நாயகனாக நடித்த 'சரிலேறு நீக்கெவரு' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கடுத்து 'அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி' என்ற படத்தில் நடித்தார். அப்படம் கடந்த வாரம் வெளியாகி ஓடி வருகிறது.
படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில்,
“எங்கள் கடின உழைப்பின் பலனைக் கண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர்கள் சமரசம் செய்து கொள்ளளாமல், இந்தப் படத்தை ஒரு பெரிய வெற்றியாக மாற்றியுள்ளனர். இது ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிகள் நிறைந்த கதை.
வெளிவரும் கருத்துக்களில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் எதிர்மறையான கருத்துக்களைப் பரப்புவது பொருத்தமானதல்ல. ஒவ்வொரு புதிய படத்தையும் இடிக்க முயற்சிப்பவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்தத் துறையை வாழ விடுங்கள். ஒரு படத்தை முழு மனதுடன் ஆசீர்வதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு தயாரிப்பாளரின் முதலீட்டைக் கெடுக்காதீர்கள். இந்தப் படம் இறுதியில் வெற்றி பெறும். இந்தப் படத்தின் தயாரிப்பின் போது கல்யாண் ராமுடன் எனக்கு ஒரு நேர்மறையான பிணைப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே, அவர் என்னை 'அம்மா, அம்மா' என்று அன்பாக அழைத்தார், மேலும் மிகுந்த அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தினார்," என்று பேசினார்.
சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் எந்த ஒரு புதிய படத்தையும் 'டிரோல்' என்ற பெயரில் கண்டபடி விமர்சிப்பது ஒரு பேஷனாகிவிட்டது. அதனால் பல படங்கள் பாதிக்கப்படுகின்றன. அப்படி விமர்சிப்பவர்களைக் கண்டித்து சரியாகப் பேசியிருக்கிறார் விஜயசாந்தி.