பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி |
இணைய, சமூக வலைத்தள உலகில் கடந்த சில நாட்களாக சில பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. யு டியுப் ஊடகங்கள் என்ற பெயரில் சிலர் அவதூறுகளைப் பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது என்ற புகார்களும் உண்டு.
இதனிடையே, நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் இது குறித்து நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கும் தனது கோரிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள், நபர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையை முடித்துள்ளார்.
அடுத்து சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் விஷ்ணு மஞ்சு இந்த பிரச்சனை குறித்து பேசியதை மேற்கோள் காட்டி, “தமிழ்நாட்டில் உள்ள நடிகர் சங்கம் எழுந்திருக்க வேண்டும். அரசு, உதயநிதியின் ஆதரவுடன் இது போன்ற பொய்யர்கள், யு டியுபர்கள் என அழைக்கப்படுவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனது நிலைக்கு இந்தத் திரையுலகமும் ஆதரவு தரும் என்று நம்புகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.