கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்புரான் திரைப்படம் வெளியானது. கடந்த 2016ல் இவர்கள் கூட்டணியில் உருவான லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருந்த இந்த படத்தில் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி மிகப்பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இதில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வெவ்வேறு விதமான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் தான் இது போன்ற வழக்குகளை தொடர்ந்தார்கள். அதேசமயம் மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி ஆரம்பத்தில் இது பற்றி கருத்து கூற மறுத்தாலும் சமீபத்தில் அவரிடம் இது பற்றி கேட்கப்பட்ட போது, “இது எல்லாம் தேவையில்லாத சர்ச்சைகள்.. எல்லாமே மக்களின் மனநிலையை வேறு ஒரு பக்கமாக திருப்பி பிசினஸ் செய்யும் முயற்சி தான் என்று கூறினார்.
அவர் பிசினஸ் செய்கிறார்கள் என்று படக்குழுவினரை கூறினாரா அல்லது இதுபோன்று சர்ச்சையை கிளப்புவர்களை பற்றி கூறினாரா என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியதால் தற்போது இந்த படத்தின் ஆரம்பத்தில் நன்றி கார்டில் காட்டப்பட்ட தனது பெயரை தூக்கி விடுமாறு படக்குழுவினரிடம் சுரேஷ்கோபி கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்களில் ஒன்றாக சுரேஷ்கோபியின் பெயரும் நன்றி கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.