அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி | சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்' | 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி | ‛கருப்பு ஸ்டார்' பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில் | ‛வாரண்ட்' வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள் | ‛பெத்தி' படத்துக்காக ராம்சரணுக்கு தேசிய விருது நிச்சயம் ; நடிகர் ரவிகிஷன் உறுதி | அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள் | முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி |

தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞராக இருப்பவர் ரவீணா ரவி. ‛ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் விதார்த்தின் ஜோடியாக நடித்ததன் மூலம் நடிகையாகவும் என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து ‛லவ் டுடே' மற்றும் ‛மாமன்னன்' ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார் ரவீணா ரவி. இந்தநிலையில் மலையாள இயக்குனர் ஜோ ஜார்ஜ் என்பவர் தான் இயக்கியுள்ள ‛ஆசாதி' என்கிற திரைப்படத்தில் ரவீணா ரவிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார். பிரபல நடிகை வாணி விஸ்வநாத் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ரவீணா ரவி, வாய் பேச முடியாத ஒரு சிறை கைதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இது பற்றி ரவீணா ரவி கூறும்போது, “மாமன்னன், லவ் டுடே படங்களை பார்த்து விட்டு தான் இயக்குனர் ஜோ ஜார்ஜ் என்னை இந்த படத்தில் நடிக்க அழைத்தார். இந்த படத்தில் முதலில் என்னுடைய கதாபாத்திரம் பேசும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் என் கதாபாத்திரத்தின் மீது இரக்கம் வரவேண்டும் என்பதற்காக வாய் பேசாத மற்றும் ஒரு கர்ப்பிணி கதாபாத்திரமாக அது மாற்றப்பட்டு விட்டது.
வாணி விஸ்வநாத் போன்ற சீனியர் நடிகருடன் அதிக காட்சிகளில் நடிக்க வேண்டுமே, என்ன செய்யப் போகிறேன் என நினைத்த சமயத்தில் தான் இயக்குனர் இப்படி என்னை பேசாமலேயே நடிக்க வைத்ததால், அப்பாடா தப்பித்தேன் என்கிற உணர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார் ரவீணா ரவி. எல்லோருக்காகவும் தொடர்ந்து கணீரென டப்பிங் குரல் கொடுத்து வரும் ரவீணா ரவிக்கு வாய் பேசாத கதாபாத்திரம் என்பது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.




