கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‛மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானவர் தான் லிஜோ மோல் ஜோஸ். அதன் பிறகு தமிழில் ‛ஜெய்பீம்' படத்தில் நடித்ததன் மூலம் ஓரளவு பிரபலமான நடிகையாக மாறி தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவரது திருமணமும் நடைபெற்றது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தாயின் இரண்டாவது திருமணம் தனது வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார் லிஜோ மோல் ஜோஸ்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் ஒன்றரை வயதாக இருக்கும் போதே என்னுடைய தந்தை இறந்துவிட்டார். அப்போது என் தாய் மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். எனக்கு சிறுவயதில் தந்தை என்று கூப்பிடுவதற்கு யாருமே இல்லாத சூழல் ஏற்பட்டு விட்டது. எனக்கு பத்து வயதாகும் போது என்னுடைய தாய் ஒருவரை அழைத்து வந்து இனி இவர்தான் உன் தந்தை என்று கூறினார். ஆனால் என் மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கனவே எனக்கும் என் அம்மாவுக்கும் சிறிய இடைவெளி இருந்தது. வளர்ப்பு தந்தை வந்த பிறகு அது கொஞ்சம் அதிகமாகி விட்டது. நான் என் சித்தியுடன் அதிக நேரங்களை செலவிட்டேன். ஒரு கட்டத்தில் சித்தியையும் பிரிந்து தனி வீட்டிற்கு செல்ல நேர்ந்தது.
அம்மாவிடம் எதையும் மனம் விட்டு பேச முடியவில்லை. காரணம் அம்மாவிடம் எது சொன்னாலும் அது வளர்ப்பு தந்தைக்கு தெரிந்து விடும் என நினைத்தேன். அம்மா என் மீது பாசம் காட்டினாலும் அது முழுமையாக இல்லை என்பது போல உணர்ந்தேன். ஆனால் கல்லூரி படிப்பை முடித்தபோது தான், அம்மா எதற்காக இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என்பதற்கான அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களுக்காக அவர்கள் இருவரும் குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கொண்டதும் அம்மா மற்றும் வளர்ப்பு தந்தை மீதான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது” என்று கூறியுள்ளார்.