ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

பேட்ட, மாஸ்டர் படங்களின் மூலம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து இங்கே தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். தற்போது தெலுங்கிலும் பிரபாஸ் ஜோடியாக இணைந்து ராஜா சாப் என்கிற படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பாரிஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் மாளவிகா மோகனன். இந்த முறை தனது தாயுடன் இணைந்து அவர் பாரிஸை சுற்றிப் பார்த்துள்ளார். அது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த பயணம் குறித்து அவர் கூறும்போது, “பத்து வருடங்களுக்கு முன்பு நானும் என் அம்மாவும் பாரிஸுக்கு வந்திருந்தோம். ஆனால் அப்போது மழை சீசன் என்பதால் எங்கேயும் வெளியே செல்ல முடியாமல் இரண்டு நாட்கள் ஹோட்டலிலேயே அடைந்து கிடந்தோம். அப்போது பாரிஸை சுற்றி பார்க்க முடியவில்லை என்கிற மனக்குறை என் அம்மாவுக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அதனால் தான் இந்த முறை அவரை பாரிஸுக்கு அழைத்து வந்து அவருக்கு பல இடங்களை சுற்றி காட்டினேன். எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இதுபோன்ற பயணம் மேற்கொள்ள தயங்குவதில்லை” என்று கூறியுள்ளார்.