பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

கடைசியாக ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ‛சிக்கந்தர்' என்ற படத்தில் நடித்திருந்தார் சல்மான்கான். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சல்மான்கான், முருகதாஸ் இருவருமே ட்ரோல் செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அபூர்வா லக்கியா என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சல்மான்கான். இப்படம் 2020ம் ஆண்டில் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ‛இந்தியாவின் மோஸ்ட் பியர்லெஸ்- 3' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. வருகிற ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு லடாக் மற்றும் மும்பையில் 70 நாட்கள் நடைபெற உள்ளது. சல்மான்கான் ராணுவ அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் மூன்று இளவட்ட நடிகர்களும் நடிக்க போகிறார்கள்.