நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‛வாடிவாசல்' படம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும், இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பின்னர் கிடப்பில் போட்டு விட்டார்கள். தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஆண்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், வாடிவாசல் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் எனது பங்களிப்பை செலுத்துவேன். அந்த வகையில் வாடிவாசல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன்'' என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.