Advertisement

சிறப்புச்செய்திகள்

தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : விஜய் சேதுபதிக்கும் மூத்த வாத்தியார் ராஜேஷ் | பிளாஷ்பேக் : தமிழ் சினிமாவான பிரெஞ்ச் நாடகம் | எந்த சொத்து, எப்போது வாங்கினேன் என்பது தெரியாது : நீதிமன்றத்தில் இளையராஜா வாக்குமூலம் | உண்மை சம்பவ கதையில் நடிக்கும் தனுஷ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு எடுப்பதா? - நடிகர் சங்கம் கண்டனம்

30 ஜூலை, 2024 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Producer-council-decide-to-stop-filming---Condemned-by-Actors-Association

நேற்று முன்தினம் நடந்த திரைப்பட சங்கங்களின் கூட்டுக்கூட்டத்தில் வருகிற ஆகஸ்டு 16ம் தேதி முதல் புது பட தயாரிப்புகளை நிறுத்தப்படும் எனவும், நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. நடிகர்களின் சம்பள உயர்வு, ஓடிடி ரிலீஸ் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது கூட்டுக்குழுவின் இந்த முடிவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர்கள் தொடர்பான பொதுத் தீர்மானம் மற்றும் தனுஷ் குறித்த தனித் தீர்மானம் தொடர்பான தகவல் எங்களுக்கு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தனுஷ் மீது இதுநாள்வரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. எந்த புகாரும் நிலுவையிலும் இல்லை. இருதரப்பும் கலந்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய நடைமுறை சிக்கல்களுக்கு, எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு தென் இந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.

திரைப்படங்களில் மிக பிரதான பங்காற்றும் தென் இந்திய நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல், ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக, படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.

இந்த தன்னிச்சையான அவசர தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும். மேலும் இது தொடர்பாக விரைவில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமைச்சர் உதயநிதிக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா சரத்குமார்அமைச்சர் உதயநிதிக்கு வேண்டுகோள் ... பிரபாஸின் அடுத்த படமான  'ராஜா சாப்' வெளியீடு அறிவிப்பு பிரபாஸின் அடுத்த படமான 'ராஜா சாப்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in