வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறியவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதன்பின் அவர் நடித்த சில படங்கள் பான் இந்தியா படமாக வெளியானாலும் பெரிய அளவில் வரவேற்பையும், வசூலையும் குவிக்கவில்லை. அந்தக் குறையை சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' தீர்த்து வைத்தது.
பிரபாஸின் அடுத்த படமாக 'சலார் 2' படம் வெளியாகும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் எஞ்சிய காட்சிகளின் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்பது தெளிவாகத் தெரியாமல் உள்ளது. அப்படியே ஆரம்பித்தாலும் இந்த வருடமோ, அடுத்த வருடத் துவக்கத்திலோ வெளியாக வாய்ப்பில்லை.
'கல்கி 2898 ஏடி' வெற்றியை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் அவரது அடுத்த வெளியீடாக 'ராஜா சாப்' படம்தான் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. மாருதி இயக்கத்தில் தமன் இசையமைப்பில், பிரபாஸ் நடிக்கும் இப்படத்தின் சிறிய முன்னோட்ட வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.
2025 ஏப்ரல் மாதம் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். “ஹாரர் ரொமான்டிக் காமெடி' படமாக இது இருக்கும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்கள். படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் அந்த வீடியோவில் இடம் பெறவில்லை.