ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இணைய, சமூக வலைத்தள உலகில் கடந்த சில நாட்களாக சில பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. யு டியுப் ஊடகங்கள் என்ற பெயரில் சிலர் அவதூறுகளைப் பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது என்ற புகார்களும் உண்டு.
இதனிடையே, நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் இது குறித்து நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கும் தனது கோரிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள், நபர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையை முடித்துள்ளார்.
அடுத்து சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் விஷ்ணு மஞ்சு இந்த பிரச்சனை குறித்து பேசியதை மேற்கோள் காட்டி, “தமிழ்நாட்டில் உள்ள நடிகர் சங்கம் எழுந்திருக்க வேண்டும். அரசு, உதயநிதியின் ஆதரவுடன் இது போன்ற பொய்யர்கள், யு டியுபர்கள் என அழைக்கப்படுவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனது நிலைக்கு இந்தத் திரையுலகமும் ஆதரவு தரும் என்று நம்புகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.