2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

இணைய, சமூக வலைத்தள உலகில் கடந்த சில நாட்களாக சில பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. யு டியுப் ஊடகங்கள் என்ற பெயரில் சிலர் அவதூறுகளைப் பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. தனி நபர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது என்ற புகார்களும் உண்டு.
இதனிடையே, நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் இது குறித்து நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கும் தனது கோரிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள், நபர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையை முடித்துள்ளார்.
அடுத்து சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் விஷ்ணு மஞ்சு இந்த பிரச்சனை குறித்து பேசியதை மேற்கோள் காட்டி, “தமிழ்நாட்டில் உள்ள நடிகர் சங்கம் எழுந்திருக்க வேண்டும். அரசு, உதயநிதியின் ஆதரவுடன் இது போன்ற பொய்யர்கள், யு டியுபர்கள் என அழைக்கப்படுவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனது நிலைக்கு இந்தத் திரையுலகமும் ஆதரவு தரும் என்று நம்புகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.