தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
நடிகர் சரத்குமார் கடந்த சமீப வருடங்களாக பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள 'தி ஸ்மைல் மேன்' என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சியாம் பிரவீன் இயக்கி உள்ளனர். இதில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக அதே சமயம் ஞாபக குறைபாடு கொண்ட அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்ட மனிதராகவும் நடித்துள்ளார் சரத்குமார்.
சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது மீண்டும் அவரது டைரக்சன் ஆசை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் நடித்த தலைமகன் படத்தின் போது திடீரென இயக்குனர் விலக வேண்டிய சூழல் வந்ததால் அந்த பொறுப்பை எடுத்து நானே இயக்குனராக மாறினேன். மற்றபடி எனக்கு டைரக்ஷனில் மிகப்பெரிய ஆர்வம் இல்லை. ஆனாலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் சேர்ந்து நானும் பயணிப்பது போல ஒரு கதையை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிந்து விடும். ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் எம்ஜிஆரை இந்த படத்தின் மூலம் மீட்டுக் கொண்டு வருவதுடன் அவருடன் நடிக்கும் ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார் சரத்குமார்.