மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
சரத்குமாரின் 150வது படம் 'தி ஸ்மைல் மேன்'. இந்த படத்தை ஷியாம் - பிரவீன் இயக்கி உள்ளனர். இதில் சிஜா ரோஸ், பிரியதர்ஷினி, பேபி ஆலியா, சுரேஷ் சந்திரா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இந்த படம் அல்சைமர் என்ற நினைவு குறைபாடு அடைந்த ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முக்கியமான வழக்கை எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்கிற கதை. இதுபோன்ற கதையில் ஹாலிவுட் படங்கள் சில வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசியதாவது : கிரைம் திரில்லர் படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஒரு குற்றத்தை எப்படி துப்புதுலக்குகிறார்கள்? என்பதை அறிய ரசிகர்கள் விரும்புகிறார்கள். நடிகர்களை பொறுத்தவரை அர்ப்பணிப்பை கொடுக்கவேண்டும். தீர்வு ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது. சில நேரங்களில் கதைகளில் குழப்பங்கள் நேரிடலாம். அது சகஜம் தான். அதுவும் கிரைம்-திரில்லர் கதைகளில் எதுவும் நடக்கும்.
எனக்கு இது 150-வது படம். ஆனால் கணக்கு போட்டால் 150 இல்லையே... என்று தோன்றும். இந்த படம் அறிவிக்கும்போது எனக்கு இது 150-வது படம். ஆனால் தாமதமாக வந்திருக்கிறது. அதனால் தான் சற்று குழப்பம். படம் முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் என்பதால், உடனே கமிட் ஆனேன். இது எனது 150வது படம் என்பது இன்னொரு சிறப்பு.
இத்தனை படங்களிலும் நான் நடிக்க ரசிகர்களின் ஆதரவும், இறைவன் அருளும் தான் காரணம். என்னை சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். ஆனால் நான் சுப்ரீம் ஸ்டாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. எப்போதும் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தான் நான் விரும்பும் பரிசு என்றார்.