சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது தான் இயக்கி உள்ள டீன்ஸ் படத்தை வருகிற ஜூலை பன்னிரண்டாம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் . ஆனால் இந்த நேரத்தில் அவர், டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றிய சிவப்பிரசாத் என்பவர் மீது கோவை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், டீன்ஸ் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் முடித்து தருவதாக என்னிடம் ஒப்பந்தம் போட்ட சிவப்பிரசாத் 68.54 லட்சம் ரூபாய் கேட்டார். தான் 42 லட்சம் முதல்கட்டமாக செலுத்தி விட்டேன், ஆனபோதிலும் இன்னும் தனது படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர் முடித்து தரவில்லை. ஏப்ரல் வரை பணிகளை முடிக்க காலநீட்டிப்பு செய்தும் அவர் முடிக்கவில்லை. மாறாக இன்னும் கூடுதலாக பணம் கேட்கிறார் என்று அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து சிவப்பிரசாத் இடத்தில் கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
சிவபிரசாத் மறுப்பு
பணிகளை முழுமையாக முடித்துவிட்டோம். அதன்பிறகே பணம் கேட்டோம். ஆனால் பணிகளை முடிக்கவில்லை என பொய் புகார் அளித்துள்ளார் பார்த்திபன். சட்டத்தை நம்புகிறோம் என தெரிவித்துள்ளார் சிவபிரசாத்.
இதே ஜூலை 12ஆம் தேதிதான் இந்தியன்-2 படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.