ராஜமவுலி பட நடிகர்களுக்கு பயிற்சி தரும் நாசர் | பவன் கல்யாண் பேரைச் சொல்லி கைத்தட்டல் வாங்கிய எஸ்ஜே சூர்யா | ரூ.1000 கோடி வசூலைக் கடக்குமா 'கல்கி 2898 ஏடி' | 'ஆர்யமாலா' என்னுடைய படம்: தயாரிப்பாளர் மீது இயக்குனர் குற்றச்சாட்டு | மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா |
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள். அதேபோல் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன், விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களிலும் இதே தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இன்றைய தினம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் திரை உலகத்தை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தி இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் வெளியாகி வருகின்றன. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்தியிருப்பதாக இதுவரை யாரும் எங்களிடத்தில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அனுமதி இல்லாமல் பத்திரிக்கை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தேமுதிக அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.