டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது தான் இயக்கி உள்ள டீன்ஸ் படத்தை வருகிற ஜூலை பன்னிரண்டாம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் . ஆனால் இந்த நேரத்தில் அவர், டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றிய சிவப்பிரசாத் என்பவர் மீது கோவை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், டீன்ஸ் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் முடித்து தருவதாக என்னிடம் ஒப்பந்தம் போட்ட சிவப்பிரசாத் 68.54 லட்சம் ரூபாய் கேட்டார். தான் 42 லட்சம் முதல்கட்டமாக செலுத்தி விட்டேன், ஆனபோதிலும் இன்னும் தனது படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர் முடித்து தரவில்லை. ஏப்ரல் வரை பணிகளை முடிக்க காலநீட்டிப்பு செய்தும் அவர் முடிக்கவில்லை. மாறாக இன்னும் கூடுதலாக பணம் கேட்கிறார் என்று அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து சிவப்பிரசாத் இடத்தில் கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
சிவபிரசாத் மறுப்பு
பணிகளை முழுமையாக முடித்துவிட்டோம். அதன்பிறகே பணம் கேட்டோம். ஆனால் பணிகளை முடிக்கவில்லை என பொய் புகார் அளித்துள்ளார் பார்த்திபன். சட்டத்தை நம்புகிறோம் என தெரிவித்துள்ளார் சிவபிரசாத்.
இதே ஜூலை 12ஆம் தேதிதான் இந்தியன்-2 படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




