பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிரபல பைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம். அவர் பேச்சு அதிரடியாக இருக்கும். ஒவ்வொரு மேடையிலும் பேசும்போதும் தமிழன் வென்றே தீருவான் என்று அரங்க அதிர சவுண்டு விடுவார். அவ்வப்போது கில்டு சினிமா அமைப்பு சம்பந்தப்பட்ட சர்ச்சையிலும் சிக்குவார். இப்போது குடும்ப பிரச்னையும் அவரை தொடர்கிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த இரவுப்பறவை பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியவர் ''என்னை சுற்றி பெரிய பிரச்னை ஓடுகிறது. என்னை கொல்ல சதி நடக்கிறது. நான் துாத்துக்குடிகாரன், வீரம் மிகுந்தவன். ஆனாலும், எனக்கு எதுவும் நடந்து விடக்கூடாது. இந்த மேடையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என்னை பாதுகாக்க வேண்டும். அவர்கள் இருக்கிற தைரியத்தில் நான் இருக்கிறேன்' என்று பேசினார்.
கடைசியில் விழாவில் பேசிய திருமாவளவன். 'ஜாக்குவார் என்றால் சிறுத்தை என்று அர்த்தம். அவர் வீரம் மிகுந்தவர். அவருக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் இருக்கிறோம். ஆனாலும், போலீசில் டிஜிபியிடம் பேசி அவருக்கு துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறேன்'' என்றார்