'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி |

அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படை தலைவன் படம் வரும் மே 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அத்தனை வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா, ஏஆர் முருகதாஸ் சசிகுமார் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது.
படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் சரியான திரை அரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரேமலதா தரப்பில் படம் வெளிவந்தே ஆக வேண்டும் என கூறுகிறாராம். ஆனால் நிலவும் சூழ்நிலைகளை பார்த்தால் படம் அடுத்த வாரம் தான் வெளியாகும் என தெரிகிறது. இருப்பினும் படத்தை ரிலீஸ் செய்ய முக்கியஸ்தர்கள் பலரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பல படங்கள் வெளிவர உதவியாக இருந்த விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா என்று கோலிவுட்டில் சிலர் வருத்தமாக பேசுவதை கேட்க முடிகிறது.