ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படை தலைவன் படம் வரும் மே 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அத்தனை வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா, ஏஆர் முருகதாஸ் சசிகுமார் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது.
படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் சரியான திரை அரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரேமலதா தரப்பில் படம் வெளிவந்தே ஆக வேண்டும் என கூறுகிறாராம். ஆனால் நிலவும் சூழ்நிலைகளை பார்த்தால் படம் அடுத்த வாரம் தான் வெளியாகும் என தெரிகிறது. இருப்பினும் படத்தை ரிலீஸ் செய்ய முக்கியஸ்தர்கள் பலரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பல படங்கள் வெளிவர உதவியாக இருந்த விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா என்று கோலிவுட்டில் சிலர் வருத்தமாக பேசுவதை கேட்க முடிகிறது.