நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
'விஸ்வாம்பரா' படத்தை அடுத்து அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் நிலையில், இன்னொரு நாயகியாக கேத்ரின் தெரசாவும் கமிட்டாகி இருக்கிறார். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கரு பொருளுடன் கூடிய ஒரு போட்டோஷூட்டை அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடத்தி உள்ளார்கள். படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாறி எடுத்துள்ள இந்த புகைப்படம் சிரஞ்சீவிக்கு பெரிய அளவில் திருப்தி கொடுத்திருக்கிறதாம். மேலும் காமெடி கலந்த கதையில் உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவி, நயன்தாராவுக்கு இடையே அதிகப்படியான காமெடி காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த அணில் ரவிபுடிதான் கடந்த ஜனவரி மாதம் சங்கராந்திக்கு வெளியான, 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருந்தார்கள்.