சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர், சமூக சேவகர் என பல முகங்களை கொண்டவர் பார்த்திபன். சென்னை நந்தனம் பகுதியில் இவரது அலுவலகம் உள்ளது. இதில் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4 பேர் உதவி இயக்குனர்கள்.
பார்த்திபன் தான் அணியும் தங்க சங்கிலி மோதிரம் போன்றவற்றை அலுவலகத்தில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்கு செல்வார். வழக்கம் போல் அலுவலகத்தில் தனது அறையில் 12 சவரன் நகைகளை ஒரு பையில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்து நகைகளை பார்த்த போது அந்த நகைகளை காணவில்லை. இதுகுறித்து அலுவலகத்தில் பணியாற்றும் 6 பேரிடம் பார்த்திபன் கேட்டுள்ளார். அனைவரும் மறுத்துள்ளனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் பார்த்திபன் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் 6 ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போது, நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கிருஷ்ணகாந்த் என்பவர் 12 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர்.
பிறகு பார்த்திபனிடம் கிருஷ்ணகாந்த் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவரை மன்னித்த பார்த்திபன் தனது புகாரை திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் கிருஷ்ணகாந்த் வேறு எங்கும் இதுபோல திருடி உள்ளாரா என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.