மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர், சமூக சேவகர் என பல முகங்களை கொண்டவர் பார்த்திபன். சென்னை நந்தனம் பகுதியில் இவரது அலுவலகம் உள்ளது. இதில் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4 பேர் உதவி இயக்குனர்கள்.
பார்த்திபன் தான் அணியும் தங்க சங்கிலி மோதிரம் போன்றவற்றை அலுவலகத்தில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்கு செல்வார். வழக்கம் போல் அலுவலகத்தில் தனது அறையில் 12 சவரன் நகைகளை ஒரு பையில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்து நகைகளை பார்த்த போது அந்த நகைகளை காணவில்லை. இதுகுறித்து அலுவலகத்தில் பணியாற்றும் 6 பேரிடம் பார்த்திபன் கேட்டுள்ளார். அனைவரும் மறுத்துள்ளனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் பார்த்திபன் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் 6 ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போது, நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கிருஷ்ணகாந்த் என்பவர் 12 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர்.
பிறகு பார்த்திபனிடம் கிருஷ்ணகாந்த் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவரை மன்னித்த பார்த்திபன் தனது புகாரை திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் கிருஷ்ணகாந்த் வேறு எங்கும் இதுபோல திருடி உள்ளாரா என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.