ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையே பாடகி கெனிஷா உடன் ரவி நெருக்கமானார். இருவரும் பொது வெளியிலேயே ஜோடியாக வலம் வருகின்றனர். இப்படி இவர்கள் வந்த பின் ஆர்த்தி ரவி, இவரது அம்மாவும், தயாரிப்பாளருமான சுஜாதா, ரவி மோகன், கெனிஷா என ஒவ்வொருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். நேற்று கூட ஆர்த்தி, ‛நாங்கள் பிரிய எங்கள் வாழ்வில் வந்த அந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என கெனிஷாவை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு இன்று(மே 21) விசாரணைக்கு வந்தது. அப்போது ரவியிடமிருந்து தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்கக்கோரி ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு ரவி மோகன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.




