Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்னபூரணிக்கு எதிர்ப்பு : ‛யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல...' - வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா

19 ஜன, 2024 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Opposition-to-Annapoorani:-Not-intended-to-hurt-anyone...---Nayanthara-expressed-regret

நயன்தாராவின் 75வது படமாக ‛அன்னபூரணி' கடந்தாண்டு இறுதியில் திரைக்கு வந்தது. இதில் சமையல்கலை நிபுணராக நயன்தாரா நடித்தார். அவருடன் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் நடித்தனர். தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தபடம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் பிராமண பெண்ணான நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க கடவுள் ராமர் கூட இறைச்சி சாப்பிட்டார் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. மேலும் நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகள். ஆனால் அவர் நமாஸ் செய்கிறார் என்றும், இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த படத்தின் இயக்குனர், நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஓடிடியில் இருந்தும் இந்தபடம் நீக்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்துடன் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை...

எனது நடிப்பில் வெளியான ‛அன்னபூரணி' படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளமாகி உள்ளது. கனத்த இதயத்துடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். அன்னபூரணி படத்தை வெறும் வணிக நோக்கத்தோடு அல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக பார்த்தோம். இந்த படத்தின் வாயிலாக நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி இருப்பதாக உணர்ந்தோம்.



தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும், எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.



அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருமணத்தால் திறமை போய்விடாது - பாவனாதிருமணத்தால் திறமை போய்விடாது - ... சைரன் ரிலீஸில் மாற்றம் : நேரடியாக தியேட்டர்களுக்கே வருகிறது சைரன் ரிலீஸில் மாற்றம் : நேரடியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in