தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் பாவனா. தமிழில் ‛சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இடையில் அவர் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் நடிப்பை விட்டு ஒதுங்கினார். பின் அதிலிருந்து மீண்டவர் 2018ல் நவீன் என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛15 வயதில் நடிகையானேன். திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நினைத்தேன். திருமணத்தால் ஒருவரின் திறமை போய்விடாது. இதற்காக ஏன் நடிப்பை நிறுத்த வேண்டும்'' என்கிறார்.