30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் | குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள் | ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் | அகண்டா 2 : சமூக வலைத்தளங்களில் பரவும் 'டிரோல்கள்' | 75, 50, 25 : ரஜினிகாந்த் பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாட்டம் | ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா |

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் பாவனா. தமிழில் ‛சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இடையில் அவர் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் நடிப்பை விட்டு ஒதுங்கினார். பின் அதிலிருந்து மீண்டவர் 2018ல் நவீன் என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛15 வயதில் நடிகையானேன். திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நினைத்தேன். திருமணத்தால் ஒருவரின் திறமை போய்விடாது. இதற்காக ஏன் நடிப்பை நிறுத்த வேண்டும்'' என்கிறார்.