டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் பாவனா. தமிழில் ‛சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இடையில் அவர் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் நடிப்பை விட்டு ஒதுங்கினார். பின் அதிலிருந்து மீண்டவர் 2018ல் நவீன் என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛15 வயதில் நடிகையானேன். திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நினைத்தேன். திருமணத்தால் ஒருவரின் திறமை போய்விடாது. இதற்காக ஏன் நடிப்பை நிறுத்த வேண்டும்'' என்கிறார்.