10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

தமிழில் 'சித்திரம் பேசுதடி, தீபாவளி' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் மலையாளத்தில் அறிமுகமான சமயத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, பிரித்விராஜ் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார். அதில் குஞ்சாக்கோ போபன், பாவனா ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக மாறியது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து எதிர்பாராத விதமாக தங்களது பயணத்திற்காக வந்த இடத்தில் விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள குஞ்சாக்கோ போபன் கூறும்போது, “நான் என்னுடன் நடித்த முதல் படத்திலிருந்து ஒரு பப்ளி பெண்ணாக பார்த்து வந்த நடிகை பாவனாவுடன் எதிர்பாராத விதமான ஒரு சந்திப்பு இது. வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களையும் பிரச்னைகளையும் தைரியமாக எதிர்கொண்டு வரும் அவரைப் பார்க்கும்போது இதயம் நெகிழ்ந்தது” என்று கூறியுள்ளார். குஞ்சாக்கோ போபனும் பாவனாவும் 'சொப்பனக்கூடு, ஹிருதயத்தில் சூக்ஷிக்கான், டாக்டர் லவ்' உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.