48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு |
பல ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள் மறு வெளியீடு செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் சமீபத்திய படங்கள்கூட ரீ ரிலீசுக்கு வருவது டிரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி சிறந்த ஒரிஜினில் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மறுமுறை வெளியிடப்பட உள்ளது. ராஜமவுலியின் பாகுபலி அளவிற்கு வரவேற்பை பெறாத இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்ற பிறகு மக்களிடம் பார்க்கும் ஆர்வம் வந்திருப்பதால் இதனை தயாரிப்பு தரப்பு வெளியிடுவதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ‛நாட்டு நாட்டு' பாடலின் தொழில்நுட்ப தரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.