கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை |
தமிழில் 'மூனே மூணு வார்த்தை, கவண்' போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷனா ராஜேந்திரன். தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேப்போல் கனா, துணிவு போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷன்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது. 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ், இயக்குகிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசை அமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் தமிழ் கூறும்போது, “ பெருமாள் முருகனின் இந்த நாவல் என்னைப் பாதித்ததால் படமாக்க முடிவு செய்தேன். தர்மபுரி பகுதியில் நடந்து வரும் சாதிய அரசியல்தான் கதைக்களம். நாவலை அப்படியே படமாக்காமல் சினிமாவுக்காக சில மாறுதல்களை செய்திருக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் இயல்பான நடிகை ஒருவர் தேவைப்பட்டார் அதற்காகவே தர்ஷனா ராஜேந்திரனை தேர்வு செய்தோம்" என்றார்.