சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
கொடைக்கானலில் உள்ள வில்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா 15 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டிடப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் கொடைக்கானலைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான ஜமீர் என்பவர் கவனித்து வந்தார். இந்த கட்டிட பணிகள் முடியும் தருவாயில் பாபி சிம்ஹாவிற்கும் ஒப்பந்தகாரர் ஜமீருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா ஒப்பந்தகாரருக்கு பல லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஜமீரின் நண்பர் உசேன் சமரசம் பேசி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகரான ராம் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டால் கொன்று விடுவோம் என உசேனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பாபி சிம்ஹா மற்றும் ராம் ஆகியோர் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.