2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
தமிழில் அறிந்தும் அறியாமலும், நெஞ்சில், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும் அஆஇஈ, இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்வர் நவ்தீப். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் போதை பொருள் அதிரடி சோதனை நடந்து பல திரைப்பட நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் சிக்கினர். அப்போது நவ்தீப்பிற்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஒரு போலீசார் அதிகாரி, இந்த வழக்கு தொடர்பாக நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக சமீபத்தில் கூறினார். இந்த தகவலை நவ்தீப் மறுத்தார். போலீசார் தேடும் நவ்தீப் நான் இல்லை. எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்று மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் நவ்தீப் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நவ்தீப்பை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.