சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழில் அறிந்தும் அறியாமலும், நெஞ்சில், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும் அஆஇஈ, இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்வர் நவ்தீப். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் போதை பொருள் அதிரடி சோதனை நடந்து பல திரைப்பட நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் சிக்கினர். அப்போது நவ்தீப்பிற்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஒரு போலீசார் அதிகாரி, இந்த வழக்கு தொடர்பாக நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக சமீபத்தில் கூறினார். இந்த தகவலை நவ்தீப் மறுத்தார். போலீசார் தேடும் நவ்தீப் நான் இல்லை. எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்று மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் நவ்தீப் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நவ்தீப்பை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.