விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து |
பிரபல தெலுங்கு இளம் நடிகர் நவ்தீப். அங்கு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிந்தும் அறியாமலும், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில நைஜீரிய இளைஞர்களையும், தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களையும் போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் நடிகர் நவ்தீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அப்போதே பேசப்பட்டது. ஆனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
சமீபத்தில் பேட்டி அளித்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், விரைவில் நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து நவ்தீப் தனக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போலீஸ் அதிகாரி குறிப்பிட்ட நவ்தீப் நான் இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது நவ்தீப் வீட்டில் இல்லை. இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே கைதான ராம்சந்த் என்பவரிடம் இருந்து நவ்தீப் போதைப் பொருள் வாங்கியதாகவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.