சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

பிரபல தெலுங்கு இளம் நடிகர் நவ்தீப். அங்கு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிந்தும் அறியாமலும், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில நைஜீரிய இளைஞர்களையும், தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களையும் போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் நடிகர் நவ்தீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அப்போதே பேசப்பட்டது. ஆனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
சமீபத்தில் பேட்டி அளித்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், விரைவில் நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து நவ்தீப் தனக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போலீஸ் அதிகாரி குறிப்பிட்ட நவ்தீப் நான் இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது நவ்தீப் வீட்டில் இல்லை. இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே கைதான ராம்சந்த் என்பவரிடம் இருந்து நவ்தீப் போதைப் பொருள் வாங்கியதாகவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.