சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழில் விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவின் தம்பியாக நடித்து பிரபலமானவர் நடிகர் நவ்தீப். அதன்பிறகு சின்னச்சின்ன படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த அவர், அஜித் நடித்த ஏகன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். இடையில் கடந்த விக்ரம் பிரபுவின் 'இது என்ன மாயம்', ஜீவா நடித்த 'சீறு' படத்தில் வில்லனாக என ஒன்றிரண்டு தமிழ் படங்களில் மட்டுமே தலைகாட்டினார். இருந்தாலும் தெலுங்கில் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.
35 வயதாகியும் இன்னும் திருமணமாகாத நவ்தீப்பிடம் சோஷியல் மீடியா சாட்டிங்கின்போது அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்வியே, உங்கள் திருமணம் எப்போது என்பதுதான்.. திருமணம் செய்யாமல் ஒருவர் வாழக்கூடாதா என்ன..? எதற்காக என் திருமணத்தை பற்றியே கேள்வி எழுப்புகிறீர்கள் என அவ்வப்போது பதில் கூறி வந்தார் நவ்தீப்.
இந்தநிலையில் சமீபத்திய சோசியல் மீடியா உரையாடலில், ரசிகர் ஒருவர் முடி நரைப்பதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வது தான் நல்லது என்று கூறினார் .இதனால் நவ்தீப் கோபமானாலும் கூட, “முடி நரைத்தால் அழகாக ட்ரிம் செய்வதுதான் சரியானதாக இருக்குமே தவிர, திருமணம் செய்வது அல்ல என்று அதற்கு வித்தியாசமாக பதில் அளித்ததுள்ளார்.