ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேருமே தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா தற்போது ஒரு பேட்டியில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாகசைதன்யா, சமந்தா விஷயத்தில் எல்லா தந்தைகளின் போலவே நானும் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் எனது மகனோ எங்களை நினைத்து கவலைப்பட்டார். அவர்களின் இந்த உறுதியான முடிவுக்கு பிறகு எனது மகனுக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம். அதோடு இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவினால் எடுக்கப்பட்டதுதான். அவர்தான் விவாகரத்துக்கு ரொம்ப ஆசைப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார் நாகார்ஜுனா.