பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜவான்'. இப்படம் 800 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் 'ஜவான்' படம் ஆஸ்கருக்குச் செல்ல வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டுள்ளார் அட்லீ.
“எல்லாம் சரியாக நடந்தால் 'ஜவான்' படம் ஆஸ்கர் செல்லும். ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு இயக்குனரும், சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொரு டெக்னீசியனுக்கும், 'கோல்டன் குளோப், ஆஸ்கர், தேசிய விருது, அனைத்து விருதுகள்' மீதும் ஒரு பார்வை இருக்கும். எனவே, எனக்கும், 'ஜவான்' படத்தை ஆஸ்கருக்குக் கொண்டு போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, பார்ப்போம். இந்த பேட்டியை கான் சார் பார்த்து, படிப்பார் என நினைக்கிறேன். “சார் இப்படத்தை ஆஸ்கருக்குக் கொண்டு போவோம்,” என அவரிடம் தொலைபேசியிலும் கேட்பேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. இந்தியத் தேர்வுக் குழு தரப்பிலிருந்து 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வு செய்து அனுப்பப்படவில்லை. மாறாக, படக்குழுவினரே நேரடியாக ஆஸ்கருக்கு விண்ணப்பித்து தேர்வானார்கள். 'ஜவான்' படத்திற்கு எப்படி நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.