யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
நடிகர் அஜித் குமார் தனது 62வது படத்திற்காக தயாராகி வருகிறார். அவரின் நீண்ட நாள் கனவான பைக்கில் உலகமெங்கும் செல்ல பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார்.
இந்நிலையில் கிலாஸ்கோவில் இ ருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தையுடன் தனியாக ஒரு பெண் பயணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு அஜித் செய்த உதவி குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விமான நிலையத்தில் குழந்தையுடன் பொருட்களையும் தூக்கி வந்துள்ள அந்த பெண்ணிடம் எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த உணர்வு எனக்கும் புரியும் எனக்கூறி அவரே அந்த பொருட்களை தூக்கி உதவியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் அஜித் குமாருடன் தன் மனைவி எடுத்த புகைப்படத்தோடு அஜித் குமாருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இப்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.