தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது 14வது படம் குறித்த அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் 19ம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக விடி 14 என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.
ஒரு போர் வீரனின் பின்னணியில் நடக்கும் கதை என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில், 1854 முதல் 78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடித்த டாக்ஸிவாலா என்ற படத்தை இயக்கிய ராகுல் சங்கிரித்யன் என்பவர் தான் இப்படத்தையும் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.




