துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் 'புஷ்பா'.
தெலுங்கில் தயாரான இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியானது. படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் உலகம் முழுவதிலும் ஐந்து மொழிகளையும் சேர்த்து 365 கோடி வசூலித்துள்ளதாக படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹிந்தியில் 100 கோடி ரூபாய் நிகர வசூலை அள்ளி அல்லு அர்ஜுனை பான்--இந்தியா ஸ்டாராக உயர்த்தியுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்துள்ள வசூலின் காரணமாக இரண்டாம் பாகத்தை இன்னும் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம்.