இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்று தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. 1800 கோடி வரை இந்தப் படம் வசூலித்தது. காட்டில் செம்மரங்களைக் கடத்தும் புஷ்பராஜ் என்ற கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன்.
காடு, மரக் கடத்தல் என்றாலே தமிழக, கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் பெரும் கடத்தல்காரனாக விளங்கிய வீரப்பன் தான் ஞாபகம் வரும். அவன் உயிரோடு இருந்த காலத்தில் நாளிதழ்களை படித்தாலே பல கடத்தல் கதைகளை எழுதிவிடலாம். ஆந்திராவில் செம்மரக் கடத்தல் என்பது பிரபலம். அதனால், 'புஷ்பா 2' படத்தில் அதை மையமாக வைத்தார்கள்.
தமிழில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜயகாந்த்தின் 100வது படமாக 1991ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கேப்டன் பிரபாகரன்'. இப்படத்தை டிஜிட்டல் தரம் உயர்த்தி நாளை மறுதினம் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது.
இப்படத்தில் கெடுபிடி அதிகமானதால் நீர் வழியே சந்தன மரங்களை மிதக்கவிட்டு கடத்தும் காட்சி ஒன்று உள்ளது. அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் வைத்திருப்பார்கள். 34 வருடங்களுக்கு முன்பு வந்த படம் ரசிகர்கள் மறந்திருப்பார்கள் என அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் காப்பியடித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.
'கேப்டன் பிரபாகரன்' படம் இப்போது புதிதாக வந்திருந்தால் 'புஷ்பா 2' படத்தின் வசூலையே மிஞ்சியிருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.




