'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' | ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பழிவாங்கும் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ் | 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை | ஆஸ்கர் புகழ் நாட்டு நாட்டு பாடகருக்கு திருமண நிச்சயதார்த்தம் | நடிகர் விஷ்ணுவர்தனின் புதிய நினைவிடத்திற்காக இலவசமாக நிலம் வழங்கிய கிச்சா சுதீப் | வார் 2 : 300 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அறிமுகப்படுத்தியவர்களிடம் அதிக சம்பளம் கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்? | பவன் கல்யாண் மீது முன்னாள் அதிகாரி வழக்கு |
இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்று தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. 1800 கோடி வரை இந்தப் படம் வசூலித்தது. காட்டில் செம்மரங்களைக் கடத்தும் புஷ்பராஜ் என்ற கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன்.
காடு, மரக் கடத்தல் என்றாலே தமிழக, கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் பெரும் கடத்தல்காரனாக விளங்கிய வீரப்பன் தான் ஞாபகம் வரும். அவன் உயிரோடு இருந்த காலத்தில் நாளிதழ்களை படித்தாலே பல கடத்தல் கதைகளை எழுதிவிடலாம். ஆந்திராவில் செம்மரக் கடத்தல் என்பது பிரபலம். அதனால், 'புஷ்பா 2' படத்தில் அதை மையமாக வைத்தார்கள்.
தமிழில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜயகாந்த்தின் 100வது படமாக 1991ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கேப்டன் பிரபாகரன்'. இப்படத்தை டிஜிட்டல் தரம் உயர்த்தி நாளை மறுதினம் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது.
இப்படத்தில் கெடுபிடி அதிகமானதால் நீர் வழியே சந்தன மரங்களை மிதக்கவிட்டு கடத்தும் காட்சி ஒன்று உள்ளது. அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் வைத்திருப்பார்கள். 34 வருடங்களுக்கு முன்பு வந்த படம் ரசிகர்கள் மறந்திருப்பார்கள் என அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் காப்பியடித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.
'கேப்டன் பிரபாகரன்' படம் இப்போது புதிதாக வந்திருந்தால் 'புஷ்பா 2' படத்தின் வசூலையே மிஞ்சியிருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.