விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
தமிழ் திரையுலகில் 'திருடா திருடி'படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாயா சிங். சினிமாவில் பெரிய ஸ்டாராக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ஆனந்தபுரத்து வீடு படத்தில் அவருடன் நடித்த சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் 'பூவே உனக்காக' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் சாயா சிங் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் கவர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூகவலைதளத்தில் 'ராணி ஜோதா பாய்' போல் கெட்டப் போட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 'இவரை போய் தமிழ் சினிமா மிஸ் பன்னிடுச்சே' என சிலர் ஃபீல் செய்து வருகின்றனர்.