கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழில், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்ஷடா. தற்போது தமிழில் நடிக்காதபோதும் தெலுங்கில் வெங்கடேஷ் - வருண் தேஜ் இணைந்து நடித்து திரைக்கு வரவிருக்கும் எப்-3 என்ற படத்தில் நடித்துள்ளார். அதோடு ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார்.
தான் நடித்த பல படங்களில் பிகினி உடையணிந்து நடித்துள்ள மெஹ்ரீன், அடுத்தபடியாக தெலுங்கில் தன்னை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வந்த இயக்குனர்கள் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற காட்சிகளில் நடித்து என்னை தைரியமான நடிகை என்று முத்திரை குத்திக்கொள்ள விரும்பவில்லை என்கிறாராம்.