‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
தமிழ் திரையுலகில் 'திருடா திருடி'படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாயா சிங். சினிமாவில் பெரிய ஸ்டாராக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ஆனந்தபுரத்து வீடு படத்தில் அவருடன் நடித்த சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் 'பூவே உனக்காக' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் சாயா சிங் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் கவர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூகவலைதளத்தில் 'ராணி ஜோதா பாய்' போல் கெட்டப் போட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 'இவரை போய் தமிழ் சினிமா மிஸ் பன்னிடுச்சே' என சிலர் ஃபீல் செய்து வருகின்றனர்.