இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் திரையுலகில் 'திருடா திருடி'படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாயா சிங். சினிமாவில் பெரிய ஸ்டாராக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ஆனந்தபுரத்து வீடு படத்தில் அவருடன் நடித்த சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் 'பூவே உனக்காக' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் சாயா சிங் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் கவர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூகவலைதளத்தில் 'ராணி ஜோதா பாய்' போல் கெட்டப் போட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 'இவரை போய் தமிழ் சினிமா மிஸ் பன்னிடுச்சே' என சிலர் ஃபீல் செய்து வருகின்றனர்.