மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சாமி, குத்து, ஏய், பரமசிவம், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கோட்டா சீனிவாசராவ் ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 83
தமிழில் பெருமாள் பிச்சை என்ற கேரக்டரில் சாமி படத்தில் வில்லனாக அறிமுகமாகி, முதல் படத்தில் தனது நடிப்பால் பலரின் மனதை கவர்ந்தவர். பின்னர் பல படங்களில் வில்லனாக குணசித்திர வேடங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் அதிகமான படங்களில் நடித்து 6 நந்தி விருது பெற்றுள்ளார். தெலுங்கில் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும் மட்டுமல்ல 1999-2004ல் விஜயவாடா கிழக்கு தொகுதி எம் எல் ஏ வாகவும் இருந்தவர்.
சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவரின் உடல் நலிந்த போட்டோக்கள் வெளியாகி பலரை சோகமடைய வைத்தது. இந்நிலையில் ஐதராபாத்தில் கோட்டா சீனிவாசராவ் காலமானார். அவருக்கு திரையுலகினர் சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.