காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், சிரஞ்சீவியின் ஆச்சர்யா, பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்பட பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே நிறுத்தப்பட்டன.
ஆனபோதும் ஆந்திராவில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கவில்லை என்பதால் தொடர்ந்து சில படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமந்தாவின் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும் அப்படத்திற்காக ரூ. 6 கோடி மதிப்பில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது.
ஆனால் சமீபத்தில் தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா, அதன்பிறகு கொரோனா அலை காரணமாக சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் இப்போது மற்ற நடிகர் -நடிகைகளை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் குணசேகர். இதேபோல் நானி நடிக்கும் ஷியாம் சிங்கராய் என்ற படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.




