காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த பத்து வருடங்களில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாகங்களுமே தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வரவேற்பை பெற்றன. அதனால் இந்த மூன்றாம் பாகத்திற்கு தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ரசிகர்களின் ஆர்வத்தை நிறைவேற்றும் விதமாக தற்போது திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
அதேசமயம் ஹிந்தியில் இதன் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்த அஜய் தேவ்கன் இந்த படத்தின் வேலைகளை துவங்கி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திரிஷ்யம் 3 படத்தை வெளியிடும் உரிமையை மும்பையை சேர்ந்த பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் ஜீத்து ஜோசப்பிடம் தற்போது பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு இதன் வெளியீட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதால் ஹிந்தியிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் தான் இந்த படம் வெளியாகுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீத்து ஜோசப், “இதனால் எந்த மாற்றமும் இல்லை. முதலில் மலையாளத்தில் தான் திரிஷ்யம் 3 வெளியாக இருக்கிறது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து தான் ஹிந்தியில் வெளியாகும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.




