காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் |

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் படம் களம்காவல். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விநாயகன் நடித்துள்ளார். இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். ஆச்சரியமாக மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்திலும் விநாயகன் ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஆனால் முதலில் மம்முட்டியின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் பிரித்விராஜ் தான் என்று சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் ஜிதின் கே ஜோஸ்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை எழுதும்போதே பிரித்விராஜை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் அப்போது அவர் எம்புரான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இந்த கதையை கேட்டுவிட்டு நிச்சயமாக இந்த கதாபாத்திரம் மம்முட்டிக்கு பொருத்தமாக இருக்கும். அவரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே மம்முட்டிக்கு அந்த கதாபாத்திரமும் பிடித்துப்போய், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தை தயாரிக்கவும் முன் வந்தார். அதே சமயம் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனை நடிக்க வைக்க சிபாரிசு செய்ததும் மம்முட்டி தான்” என்று கூறியுள்ளார்.