'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன். தமிழில் திரிஷா நடித்த 'ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இவர் நடித்த படம் ஒன்று வெளியாகி கொண்டே இருக்கிறது. பிசியான நடிகையாக இருக்கும் இவர் நடிப்பில் அடுத்ததாக 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் தீபு கருணாகரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனஸ்வரா ராஜன் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று தனது பேட்டிகளில் குற்றம் சாட்டி வந்தார்.
ஆனால் அதை மறுத்த அனஸ்வரா ராஜன், “இயக்குனர் என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து என்னுடைய படங்களை பார்த்தால் அவற்றின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நான் தவறாமல் கலந்து கொண்டு வருகிறேன். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள், அதன் விவரங்கள் குறித்து எனக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நான் கலந்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.
அதே சமயம் தன்னை பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவித்ததற்காக இயக்குனர் தீபு கருணாகரன் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் அனஸ்வரா ராஜன். இந்த நிலையில் நடிகர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இவர்கள் இருவரையும் அழைத்து பிரச்சினைகளை கேட்டு அறிந்து சுமூகமாக தீர்வு வழங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் அனஸ்வரா ராஜன்.




