இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இதயத்தை திருடாதே தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. புதுப்புது நிகழ்ச்சிகளையும், மெகா தொடர்களையும் வெளியிட்டு சின்னத்திரை ரசிகர்களை மெதுவாக தன் பக்கம் கவர்ந்து வருகிறது கலர்ஸ் தமிழ் டிவி. இந்நிலையில் அந்த தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "இதயத்தை திருடாதே" என்ற சீரியலின் இரண்டாம் பாகத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
முதல் சீசனில் கதாநாயகன் சிவா ஜெயிலுக்கு செல்வது போல் முடிக்கப்பட்டிருக்கும். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தின் கதைக்களம் 6 வருடம் கழித்து நடைபெறுவது போல் காட்டப்பட்டுள்ளது. கதையில் சிவா பெரிய டான் ஆகி விடுகிறார். நாயகி சஹானாவுக்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை உள்ளது. சஹானா மிகப்பெரிய தொழிலதிபர் ஆகிறார். சஹானா தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு அவளது தந்தையை பற்றி எதுவுமே கூறாமல் வளர்க்கிறார்.
சிவா பெரிய டான் ஆனது எப்படி?. தன் தாயை மீறி தந்தையைப் பற்றி தெரிந்து கொள்வாரா ஐஸ்வர்யா? இவர்கள் மூவரும் திரும்பவும் சேர்வார்களா? என்ற கேள்விகளுடன் இதயத்தை திருடாதே சீசன் 2 கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் ஹிட்டான ஒரு சீரியலுக்கு பெரும்பாலும் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது கடினம். அப்படியே ஒரு சில சீரியல்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை பார்வையாளர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, தற்போது வெளியாகவுள்ள இதயத்தை திருடாதே சீசன் 2 ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுமா?