நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான மாஸ்டர் செப் எனும் சமையல் கலை நிகழ்ச்சி, முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்குகிறார். மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் தொகுத்து வழங்குகிறார். இதன் நடுவர்களாக பிரபல செப்களான கவுசிக், ஆர்த்தி, ஹரிஷ் பணியாற்றுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி 13 மாதங்கள் வரை தொடர்ச்சியாக ஒளிபரப்பாக இருக்கிறது.