தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் சின்னத்திரையில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்த இந்த தொடரில், அவருக்கு ஜோடியாக தர்ஷனா அசோகன் நடிக்கிறார்.
நீதானே என் பொன் வசந்தம் தொடர் பார்வையாளர்களிடையே சரியான வரவேற்பை பெறா விட்டாலும், இன்ஸ்டாகிராமில் தனது மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷனா. சமீபத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் பாவடை தாவணி அணிந்து அசல் கிராமத்து பெண்ணாக காட்சியளிக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தையின் ஆசைக்காக மருத்துவம் படித்து முடித்த தர்ஷனாவுக்கு, உண்மையில் மாடலிங் துறையில் தான் ஆர்வம் அதிகமாம். தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் தர்ஷனா இன்ஸ்டாகிராமில் அவற்றை பதிவேற்றி வருகிறார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.