காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் சின்னத்திரையில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்த இந்த தொடரில், அவருக்கு ஜோடியாக தர்ஷனா அசோகன் நடிக்கிறார்.
நீதானே என் பொன் வசந்தம் தொடர் பார்வையாளர்களிடையே சரியான வரவேற்பை பெறா விட்டாலும், இன்ஸ்டாகிராமில் தனது மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷனா. சமீபத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் பாவடை தாவணி அணிந்து அசல் கிராமத்து பெண்ணாக காட்சியளிக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தையின் ஆசைக்காக மருத்துவம் படித்து முடித்த தர்ஷனாவுக்கு, உண்மையில் மாடலிங் துறையில் தான் ஆர்வம் அதிகமாம். தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் தர்ஷனா இன்ஸ்டாகிராமில் அவற்றை பதிவேற்றி வருகிறார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.