பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் சின்னத்திரையில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்த இந்த தொடரில், அவருக்கு ஜோடியாக தர்ஷனா அசோகன் நடிக்கிறார்.
நீதானே என் பொன் வசந்தம் தொடர் பார்வையாளர்களிடையே சரியான வரவேற்பை பெறா விட்டாலும், இன்ஸ்டாகிராமில் தனது மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷனா. சமீபத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் பாவடை தாவணி அணிந்து அசல் கிராமத்து பெண்ணாக காட்சியளிக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தையின் ஆசைக்காக மருத்துவம் படித்து முடித்த தர்ஷனாவுக்கு, உண்மையில் மாடலிங் துறையில் தான் ஆர்வம் அதிகமாம். தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் தர்ஷனா இன்ஸ்டாகிராமில் அவற்றை பதிவேற்றி வருகிறார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.