என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் சின்னத்திரையில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்த இந்த தொடரில், அவருக்கு ஜோடியாக தர்ஷனா அசோகன் நடிக்கிறார்.
நீதானே என் பொன் வசந்தம் தொடர் பார்வையாளர்களிடையே சரியான வரவேற்பை பெறா விட்டாலும், இன்ஸ்டாகிராமில் தனது மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷனா. சமீபத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் பாவடை தாவணி அணிந்து அசல் கிராமத்து பெண்ணாக காட்சியளிக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தையின் ஆசைக்காக மருத்துவம் படித்து முடித்த தர்ஷனாவுக்கு, உண்மையில் மாடலிங் துறையில் தான் ஆர்வம் அதிகமாம். தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் தர்ஷனா இன்ஸ்டாகிராமில் அவற்றை பதிவேற்றி வருகிறார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.